Home புகார் பெட்டி கணினி கோளாறு; மதுரை சுங்கச்சாவடியில் 2 கி.மீ., அணிவகுத்த வாகனங்கள்!

கணினி கோளாறு; மதுரை சுங்கச்சாவடியில் 2 கி.மீ., அணிவகுத்த வாகனங்கள்!

madurai-toll-gate-traffic
madurai toll gate traffic

தொழில்நுட்ப கோளாறு சுங்கச்சாவடியில் 2 கிலோமீட்டருக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள் வாகன ஓட்டிகள் சிரமம் மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர் காவல்துறையினர்:

மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடியில் சுமார்
பெங்களூர் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வழக்கம்போல சென்று கொண்டிருந்தன.

திடீரென, கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுங்கக் கட்டணம் வசூல் செய்வது மற்றும் பாஸ்ட் ட்ராக் வேலை செய்யாமல் போனது . இதனால் ,வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டருக்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன .

சம்பவம் குறித்து தகவலறிந்த திருமங்கலம் காவல் துறையினர் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர் .
மற்ற வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டு கணினி சரி செய்யும் வரை மாற்றுப்பாதையில் அனுப்பிவைத்தனர் .
இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டது .

சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு கணினி பழுது பழுது சரியானதால், வழக்கம் போல் சுங்கக் கட்டணம் செலுத்தி வாகனங்கள் சென்றன .

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version