மதுரை அருகே 2 குழந்தைகள் எலும்புக் கூடு
மதுரை
மதுரை அருகே கொந்தகையில் அகழாய்வில் இரண்டு குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொந்தகையில், தற்போது ஆறாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது.
இதுவரை ஆறு குழிகள் தோண்டப்பட்டு, முதுமகள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஏற்கனெவே, மூன்று குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்ட நிலையில், மேலும் இரண்டு குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், கொந்தகையில் கிடைத்து வரும் அகழாய்வில், குழந்தைகளின் எலும்புக் கூடுகள் மூன்றாம் நிலை என, கருதப்பட்டு மரப்பணு ஆய்வுக்கு பின்னர், காலம், வயது, பாலினம் ஆகிய விபரங்கள் தெரிய வருமாம்.