ம.தி.மு.க விழித்துக் கொண்டது; தி.மு.க வை பின்னுக்கு தள்ளியது: வை.கோ

முதல் பால் சிக்ஸர் அடித்தார் – மாவட்ட செயலாளர் தி.மு.க விற்கு செல்வதை அறிந்த வை.கோ – அவர் என்ன தி.மு.க விற்கு செல்வதை கட்சியை விட்டு நான் விலக்குகிறேன் – வை.கோ – அதிரடி

வரும் சட்டமன்ற தேர்தலையடுத்து தி.மு.க வினர் தற்போது ம.தி.மு.க வினரை குறி வைத்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தங்களது கட்சிகளுக்கு இழுக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். சட்டமன்ற தேர்தல் செலவு தி.மு.க தரப்பில் இருந்து ரூ 50 ஆயிரம் கோடி என கணக்கிடப் பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். எல்லாம் 2 ஜி மற்றும் ஸ்பெக்ட்ரம் முறைகேடு பணம் தான் என்கின்றனர். மற்ற கட்சியினர்.

இப்படி இருக்க ஒவ்வொரு மாவட்ட செயலாளரையும் தங்கள் கட்சிக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் தி.மு.க வினர் மத்தியில் கரூர் மட்டும் விதிவிலக்கல்ல, கரூர் மாவட்ட ம.தி.மு.க செயலாளர் பரணி தி.மு.க விற்கு தாவலா ? என கடந்த சில தினங்களாக வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் பரவலாக வலம் வந்த நிலையில் தற்போது ம.தி.மு.க பொதுச்செயலாளர் விழித்துக்கொண்டுள்ளார். உடனடியாக அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அவரே தூக்கியுள்ளார். கட்சி விட்டு கட்சி மாறும் படலம் நிகழ்ச்சியில் கட்சியை விட்டு தூக்கிய முதல் நிகழ்ச்சி இது.

இந்நிலையில் தூங்கிக்கொண்டிருந்த வை.கோ வை முழித்துக்கொள்ள வைக்கும் நிகழ்ச்சியாக உள்ளதாக மற்ற கட்சியினர் பேசி வரும் நிலையில், தற்போது பொதுச் செயலாளர் பம்பரம் போல் செயல்பட்டு வருகிறார் என ம.தி.மு.க வினரே புகழாரம் சூட்டி வருகின்றனர். எது எப்படியோ தி.மு.க சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தாரம் ஆண்டி என்ற பழமொழிக்கு ஏற்றவாறு தி.மு.க, ம.தி.மு.க வை பம்பரம் போல் சுழல வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கடந்த சில மாதங்களாக கட்சி பணியில் தொய்வு ஏற்படும் வகையில் செயல்பட்டதாகவும், தி.மு.க விற்கு சப்போட்டாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சி.ஆனந்தகுமார் கரூர்

 


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.