விஷச் செடி

Published:

“விஷச்செடி”

  (மீ.விசுவநாதன்)

 

இப்போதெல்லாம்

நம்

நாட்டில் அதிகமாக,

மிக வேகமாக வளர்வது

இரண்டே இரண்டுதான்

ஒன்று

கருவேல மரம்

மற்றது

ஊழல் பேர்வழிகள் !

 

கருவேலமரம்

பூமியின் நீராதாரத்தை 

உறிஞ்சித் தானும்,

தன் குடும்பமுமாகப் 

புறம்போக் கெங்கும் வளரும் !

 

அது விஷச் செடி

அதை அழிக்கவேண்டுமாம் !

 ஊழல் பேர்வழிகள்

நாட்டின் பொருளாதாரத்தையே

உறிஞ்சித் தானும்,

தன் குடும்பமுமாக

மட்டுமே வளரும் புறம்போக்குகள் !

தேசத்தின் தீய சக்திகள்

வெளியே தெரியாத விஷச் செடிகள் !

 

அட..கருவேல மரமாவது

ஏழைக்கு

அடுப்பெரிக்க உதவும்..

 

இப்பச் சொல்லுங்க

 

எரிக்க வேண்டிய 

“விஷச்செடி”

கருவேல மரங்களா?

இல்லை 

தீய சக்திகளா?

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img