விஷச் செடி

Dhinasari Home page

“விஷச்செடி”

  (மீ.விசுவநாதன்)

 

இப்போதெல்லாம்

நம்

நாட்டில் அதிகமாக,

மிக வேகமாக வளர்வது

இரண்டே இரண்டுதான்

ஒன்று

கருவேல மரம்

மற்றது

ஊழல் பேர்வழிகள் !

 

கருவேலமரம்

பூமியின் நீராதாரத்தை 

உறிஞ்சித் தானும்,

தன் குடும்பமுமாகப் 

புறம்போக் கெங்கும் வளரும் !

 

அது விஷச் செடி

அதை அழிக்கவேண்டுமாம் !

 ஊழல் பேர்வழிகள்

நாட்டின் பொருளாதாரத்தையே

உறிஞ்சித் தானும்,

தன் குடும்பமுமாக

மட்டுமே வளரும் புறம்போக்குகள் !

தேசத்தின் தீய சக்திகள்

வெளியே தெரியாத விஷச் செடிகள் !

 

அட..கருவேல மரமாவது

ஏழைக்கு

அடுப்பெரிக்க உதவும்..

 

இப்பச் சொல்லுங்க

 

எரிக்க வேண்டிய 

“விஷச்செடி”

கருவேல மரங்களா?

இல்லை 

தீய சக்திகளா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.