“விஷச்செடி”
(மீ.விசுவநாதன்)
இப்போதெல்லாம்
நம்
நாட்டில் அதிகமாக,
மிக வேகமாக வளர்வது
இரண்டே இரண்டுதான்
ஒன்று
கருவேல மரம்
மற்றது
ஊழல் பேர்வழிகள் !
கருவேலமரம்
பூமியின் நீராதாரத்தை
உறிஞ்சித் தானும்,
தன் குடும்பமுமாகப்
புறம்போக் கெங்கும் வளரும் !
அது விஷச் செடி
அதை அழிக்கவேண்டுமாம் !
ஊழல் பேர்வழிகள்
நாட்டின் பொருளாதாரத்தையே
உறிஞ்சித் தானும்,
தன் குடும்பமுமாக
மட்டுமே வளரும் புறம்போக்குகள் !
தேசத்தின் தீய சக்திகள்
வெளியே தெரியாத விஷச் செடிகள் !
அட..கருவேல மரமாவது
ஏழைக்கு
அடுப்பெரிக்க உதவும்..
இப்பச் சொல்லுங்க
எரிக்க வேண்டிய
“விஷச்செடி”
கருவேல மரங்களா?
இல்லை
தீய சக்திகளா?


