அம்பாசமுத்திரத்தை அடுத்த சேரன்மாதேவியில் விவசாய கூட்டமைப்பினருடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது பேசிய விவசாய பிரதிநிதிகள், பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய நதிகளிலிருந்து உரிய நேரத்தில் கடந்த 4 வருடங்களாக தண்ணீர் திறந்துவிடவில்லை, அதனால் விவசாயம் செய்ய முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக தெரிவித்தனர். அதோடு மட்டுமல்லாமல் இப்பகுதியில் உள்ள குளங்கள, ஏரிகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்படாமல் உள்ளதால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை பெற முடியவில்லை என்றும் வேதனை தெரிவித்தனர். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், உங்கள் தேவைகளை நிறைவேற்றும் இந்த மாற்றத்தை திமுகவால் தான் கொண்டுவரமுடியும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்துருக்கீறீர்கள். அதே நம்பிக்கையோடு அனைவரிடத்திலும் எடுத்துக்கூறுங்கள் நிச்சயமாக அனைத்து நலத்திட்டங்களையும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் உடனடியாக நிறைவேற்றித் தரப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.