- Ads -
Home Reporters Diary தங்க நகை அடகு கடையில் கொள்ளை

தங்க நகை அடகு கடையில் கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதி மெயின் ரோட்டில் உள்ள நகை அடகு கடையில் இன்று 29-09-2015காலை 9:30 மணியளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கடையில் புகுந்து, அங்கு பணியில் இருந்த 6 ஊழியர்களை கட்டிப்போட்டு விட்டு, கடையில் இருந்த 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றது. மக்கள் நடமாட்டம் அதிக உள்ள பகுதியில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் வத்தலகுண்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த திண்டுக்கல் எஸ்.பி.,சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, ஊழியர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version