- Ads -
Home Reporters Diary விரைவில் தி.மு.க., ஆட்சிக்கு வரும் என மக்கள் நம்பிக்கை : ஸ்டாலின்

விரைவில் தி.மு.க., ஆட்சிக்கு வரும் என மக்கள் நம்பிக்கை : ஸ்டாலின்

திமுக பொருளாளர் ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாநிலமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இன்று மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயணம் செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

உலக அளவில் பேசப்படும் மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியான அலங்காநல்லூரில் மக்களை சந்தி்த்து குறைகளை
கேட்டபோது ஸ்டாலின் கூறுகையில் அப்பகுதி மக்களிடம் கூறுகையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு ஆபத்து வரும்போதெல்லாம் துணை நின்றது திமுக. ஜல்லிக்கட்டை முறைப்படுத் திமுக ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஜல்லிக்கட்டு முடங்கியதற்கு அதிமுக அரசே காரணம். திமுக ஆட்சி கொண்டு வந்தபடி சட்டப்படி ஜல்லிக்கட்டு நடத்தவில்லை.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும். தை மாதத்திற்குள் ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும். அமைச்சர்களாலேயே முதல்வரை பார்க்க முடியவில்லை. அதிமுக ஆட்சியில் நிர்வாகம் ஸ்தமபித்துள்ளது. சட்டசபையில் ஜெயலலிதா, அறிவித்தபடி பல நூறுகோடி திட்டங்களில் ஒனறாவது நடந்துள்ளதா என கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சிக்கு வரும் என மக்களிடம் நம்பிக்கை அதிகரித்துள்ளது என ஸ்டாலின் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version