மீண்டும் விமானத்தில் பறந்தார் விமானப் படை வீரர் அபிநந்தன் !
பிப்ரவரி மாதம் பாகிஸ்தானிடம் இருந்து மீட்கப்பட்ட இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான், பதான்கோட் விமானப்படைத் தளத்தில் இருந்து 6 மாத ஓய்விற்குப் பிறகு இன்று மீண்டும் விமானத்தில் பறந்தார்.
விமானப்படை போர் விமானம் 69 ரகத்தைச் சேர்ந்த மிக் 21 விமானத்தில் அவர் பறந்து சென்றார். அபிநந்தனுடன் இந்திய விமானப்படை தலைமை ஏர் மார்ஷல் பி.எஸ்.தனோய் உடன் விமானத்தில் சென்றார்.
இந்தப் புகைப்படன்கள் வெளியாகி அபிநந்தன் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரம், அபிநந்தனின் அந்த முத்திரை மீசை இப்போது காணாமல் போயிருந்தது கண்டு அவர்கள் ஆச்சரியமும் வருத்தமும் அடைந்தனர்.