யாஹூ தளத்தில் சேமித்து வைத்திருக்கும் புகைப்படங்கள், கோப்புகள்,என அத்தனை தரவுகளையும் சேமித்துவைத்துக் கொள்ளலாம்.
சுமார் இருபது ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டுவந்த யாஹூ க்ரூப்ஸ் அதன் சேவையை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே யாஹூ க்ரூப்ஸ தளத்தில் உள்ள தரவுகளைப் பயனாளர்கள் வருகிற டிசம்பர் 14-ம் தேதிக்குள் சேமித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டள்ளது.
முன்பு உலகின் முன்னணி நிறுவனமாக இருந்த யாஹூ க்ரூப்ஸ் சேவை மிகவும் பிரபலமாக இருந்தது என்றுதான் கூறவேண்டும் உலகம் முழுவதும் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட இந்த நிறுவனம் சேவையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.
எனவே யாஹூ தளத்தில் சேமித்து வைத்திருக்கும் புகைப்படங்கள், கோப்புகள்,என அத்தனை தரவுகளையும் சேமித்து வைத்துக் கொள்ளலாம். யாஹூ நிறுவனத்தின் கொள்கையின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் யாஹூ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
குறிப்பாக 21-ம் நூற்றாண்டில் முதல் மாபெரும் சர்வதேச டெக் நிறுவனமாக வளர்ந்த நிறுவனம் இந்த யாஹூ. 2001-ம் ஆண்டு யாஹூ உருவான காலத்திலிருந்து இன்று வரையில் இன்டர்நெட் உலகில் பல்வேறு அபரிமித மாற்றங்கள்
ஏற்பட்டுவிட்டன.
ஆனாலும்,மெயில் முறைகளில் பல அப்டேட்களை தரத் தயாராகி வருகிறோம் என்று தெரிவித்தது யாஹூ. இருந்தபோதிலும் புதிய வசதிகள் மற்றும் புதிய அப்டேட்கள் அதில் வழங்கப்படவில்லை, கடைசியில் சேவையை நிறுத்துவதாக அறவித்ததுள்ளது.
1998 ஆம் ஆண்டில் கூகிள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் யாஹூவை அணுகினர். அதன் பேஜ் தரவரிசையை
( இந்திய மதிப்பில் ரூ. 7,09,45,000) $ 1 மில்லியனுக்கும் குறைவாக வாங்கியது. கூகுள் நிறுவனர்கள் இருவரும் ஸ்டான்ஃபோர்டில் படிப்பில் கவனம் செலுத்த விரும்பினர். ஆனால் பயனர்கள் தங்கள் சொந்த மேடையில் அதிக நேரத்தை செலவிட விரும்பியதால், தொழிலை மேம்படுத்த விரும்பவில்லை. அப்போது உடன்பாடு ஏற்படதால், யாஹூ நிறுவனம் கூகுளை வாங்க மறுத்துவிட்டது.
கூகுள் நிறுவனம் அதன் பிறகு படிப்படியாக வளர்ந்தது. கூகுளின் மிக விரைவான வளர்ச்சியால், பல புதிய மென்பொருள் சேவைகளையும் நிறுவனம் நிறுவியது. தற்போது கூகுள் இணையத் தேடலுடன் கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்ட்கள், கூகுள் பிளஸ், கூகுள் டாக், கூகுள் வரைபடம், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப், கூகுள் டிரைவ், கூகுள் டியோ போன்ற பல்வேறு சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது.