மும்பையில் பிரபலமான ஐந்து நட்சத்திர ஓட்டலில், தொடர்ந்து விபச்சாரம் மற்றும் விபச்சாரத்திற்கு அழகிகளை, நடிகைகள் சிலர் சப்ளே செய்து வருவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து ரகசிய தகவல் அடிப்படையில் திடீரென அங்கு துணை போலீஸ் கமிஷனர் ஸ்வாமி தலைமையில், போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த, நடிகையும் மாடலுமான அம்ரிதா தனோனா (32) என்பவரையும், நடிகை ரிச்சா சிங் என்பவரும் சிக்கினர்.
முன்னதாக காவல்துறையினர் வருவதை அறிந்து அங்கிருந்து அம்ரிதா தப்பிக்க முயன்றார். எனினும் அவரை காவல்துறையினர் மிகவும் சாதூர்த்தியமாக மடக்கி பிடித்தனர்.
அம்ரிதா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அர்ஹான் கானின் முன்னாள் காதலி. சமீபத்தில் கூட அர்ஹான் கான் தன்னிடம் 5 லட்ச ரூபாய் பணத்தை ஏமாற்றி விட்டதாகவும், எனவே அவரை சிறையில் அடிக்காமல் ஓயமாட்டேன் என கூறி வந்தார்.
விபச்சார வழக்கில் இரண்டு நடிகைகள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.