Home அடடே... அப்படியா? செல்வம், நிம்மதி பெருக, தோஷம் நீங்க, நினைத்தது நடக்க… வீட்டில் செய்ய வேண்டியது!

செல்வம், நிம்மதி பெருக, தோஷம் நீங்க, நினைத்தது நடக்க… வீட்டில் செய்ய வேண்டியது!

வீட்டில் லக்ஷ்மி கடாக்சஷம் பெருக செய்ய வேண்டியவை.

.
பூமிகாரகன் ,ரத்தத்துக்கு அதிபதி,ஆரோக்கியத்துக்கு பாதுகாவலன்,தொழிலுக்கு கர்த்தாவான முருகனின் விருப்பமான செவ்வரளி மரத்தை வீட்டில் வளர்த்தால் வீட்டுக்கடன் விரைவில் அடைபடும்.நோய்கள் பாதிப்பு குறையும்.

மருதாணி வளர்த்தால் கெட்ட சக்திகள் அண்டாது

பன்னீர் ரோஜா,மல்லிகைப்பூ செடி ,வளர்த்தால் கணவன் மனைவி வசியம் உண்டாகும்.

முல்லைச்செடி வளர்த்தால் பெரியோர்கள் ஆசி கிடைக்கும். செல்வாக்கு வளரும்.

செம்பருத்தி வள்ர்த்தால் பெண்களுக்கு அதிர்ஷ்டம்.

மாதுளை வளர்த்தால் அறிவான குழந்தைகள் பாக்யம் உண்டாகும்.!!

கஜலட்சுமி உருவத்தை மரத்தில் செதுக்கி தலைவாசலுக்கு மேல்புறம் வையுங்கள் வாஸ்து மீறல்கள் நீங்கி தோசம் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் கண் திருஷ்டி போகும்.

முன்பெல்லாம் வீட்டு படியில் யானை சிலையை இருபுறமும் செதுக்கி இருப்பார்கள் இது களிற்றுப்படிகள் எனப்படும் இப்போதெல்லாம் நிறைய மாடர்ன் டிசைன்கள் வந்துவிட்டன ஆனால் அந்த களிற்றுப்படிகள் விசேஷ சக்தி கொண்டது.
தெரு வழியே யானை போனால் தண்ணீர் கொடுத்து வீட்டின் மீது தெளிக்க செய்யலாம். இதனால் தரித்திரம் விலகி அதிர்ஷ்டம் உண்டாகும்.

வெள்ளிக்கிழமை மாலையில் உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம். கரி ,விறகு ,பஞ்சு போன்றவை வாங்கக்கூடாது.

பெளர்ணமி தினத்தில் இரவு குளித்துவிட்டு, மொட்டை மாடியிலோ நதிக்கரையிலோ அல்லது மலை மீதோ அமர்ந்து , சந்திர ஒளியில் காயத்ரி மந்திரம் ,கனகதாரா ஸ்தோத்திரம்,சொல்லலாம் அல்லது நல்ல கருத்துக்கள் உடைய தெய்வீக துதிகள் படிக்கும்போது அதற்கு சக்தி அதிகம்

அந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கும் பலன்கள் உங்களுக்கு பலிக்க ஆரம்பித்து நன்மைகள் வந்து சேரும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இதை படிக்கலாம்.

நீங்கள் எதிர்காலத்தில் என்னவெல்லாம் அடைய விரும்புகிறீர்களோ அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கலாம். உரத்து பேசக்கூடாது.

உங்கள் கனவுகளை பலமுறை விவாதித்து பேசும்போது ஆழ்மனதில் பதியும் அது பிரபஞ்ச சக்தியால் கிரகைக்கப்பட்டு அது உங்களை வந்தடையும் விரும்பியதை கிடைக்கச்செய்யும்.

பெளர்ணமி அன்று கந்த சக்தி பூமியில் அதிகம். தேவதைகள் பூமிக்கு வருகை தரும் நாள். அமைதியான சுத்தமான இடத்தில் நல்ல வார்த்தைகளை பேசும்போது அந்த தேவதைகள் உங்கள் உடன் அருகில் இருந்து அப்படியே ஆகட்டும் என்பார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version