தீராத மலச்சிக்கலுக்கு மாதுளம்பழம்.
தொடர்ந்து 3 நாட்களுக்கு அரை மாதுளம்பழம் பகல் உணவிற்குப் பின் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். வறட்டு இருமலுக்கு அதேபோல் தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அடிக்கடி மாதுளம்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகி புதிய இரத்தம் உண்டாகும்.
இதன் காரணமாக உடல் பலம், அறிவு வளர்ச்சி, நினைவாற்றல் ஏற்படும். எலும்புகள், பற்கள் உறுதிபடும். பித்த சம்பந்தமான நோய்கள் குணமாகும். வைட்டமின் சி, மக்னீசியம், கந்தகம் ஆகிய சத்துக்கள் மாதுளையில் அதிகம்.
மாதுளையின் விதைக்குக் காச ரோகத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும், சுக்கிலத்தைப் பெருக்கும் சக்தியும் நீர்ச்சுருக்கு வயிற்று நோய்களைக் குணமாக்கும் தன்மையும் உண்டு.
மூல நோய் தீர,
வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.