பிச்சைக்காரர்கள் என்ற சொல் இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டது சமூகத் தளத்தில். இதற்கு அடி போட்டவர் உலக மகா கோடீஸ்வரரான தயாநிதி மாறன். அவர் மக்களை பிச்சைக்காரர்கள் என்றார். அவர்களிடம் பிச்சை எடுப்பவர்கள் தான் முதலமைச்சர் பழனிசாமியும் பிரதமர் மோடியும் என்றார். அவரது திமிர்த்தனமான பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் வரிந்து கட்டிக் கொண்டு வசைபாடி வருகின்றார்கள் பலரும்! நேற்று ஞாயிற்றுக் கிழமை இந்த டிவிட்டர் ஹேஷ்டேக் பிரபலமானது.
கொரோனா பரவல் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், “மக்களே ஏற்கெனவே பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள், அந்த பிச்சைக்காரர்களிடமும் பிச்சை எடுக்கிறார்கள் பிரதமர் மோடியும் முதலமைச்சர் பழனிசாமியும்” என்று கூறினார் உலகமகா கோடீஸ்வரர்களில் ஒருவரான தயாநிதி! அவரது திமிர்த்தனமான பேச்சுக்கு தனது கண்டனங்களைத் தெரிவித்து டிவிட்டர் பதிவுகளில் சரமாரியாக பதில் அளித்திருந்தார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.
அவரது டிவிட்டர் பதிவுகளில் சில…
பிச்சைக்காரர் மறுவாழ்வு நிதி பரிசுச் சீட்டு வெளியிட்டு அதையும் ஆட்டைய போட்ட கூட்டம் இந்திய மக்களை, பிரதமரை பிச்சைக்காரர்கள் என்பதா.
@Dayanidhi_Maran #திடீர்பணக்கார_திமிர்தயாநிதி
தான் ஊழல் செய்து சொத்து சேர்த்ததால் டிஸ்மிஸ் செய்யப்பட்டு விசாரணை கமிஷன் வைக்கப்பட்டதை பயன் படுத்தி தொண்டர்களிடம் பிச்சையெடுத்த கருணாநிதியின் பேரன் தயாநிதியின் திமிர் பேச்சு கண்டிக்கத்தக்கது.@BJP4India@BJP4TamilNadu#திடீர்பணக்கார_திமிர்தயாநிதி
கதை கேளு, கதை கேளு, மாறன்கள் கதை கேளு. போட்டியாளர்களை நசுக்கி வளர்ந்த கூட்டம். சென்னையில் எஸ்.சி.வி.க்கு போட்டியாக இருந்த ஹேத் வே பணியாளர்களை குண்டர்களை கொண்டு தாக்கி ரத்தக்களறி ஆக்கிய ரத்தக் காட்டேரிகள் இவர்கள். இவர்களுக்கு போட்டியாக யாரும் வர முடியாது. @BJP4TamilNadu
பிச்சைக்காரர் மறுவாழ்வு நிதி பரிசுச் சீட்டு வெளியிட்டு அதையும் ஆட்டைய போட்ட கூட்டம் இந்திய மக்களை, பிரதமரை பிச்சைக்காரர்கள் என்பதா. @Dayanidhi_Maran#திடீர்பணக்கார_திமிர்தயாநிதி