இன்று மார்கழி மாத வளர்பிறை பதினோராம் நாளை முன்னிட்டு, வைகுண்ட ஏகாதசி உத்ஸவம் வைணவ ஆலயங்களில் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள வைணவ திருத்தலங்களில் பரமபத வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்து அருள் பெற்றனர்.
இன்று வைகுண்ட ஏகாதசி தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வைணவ திருத்தலங்களில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பகல் பத்து உத்ஸவம் கொண்டாடப் படும் ஆலயங்களில் அதிகாலையும், இராப் பத்து உத்ஸவம் கொண்டாடப் படும் ஆலயங்களில் மாலையும் வைகுண்ட வாசல் திறப்பு நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இன்று 6 ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.
மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் கோவில் காலை 5.30 மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.