― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்வைகுண்ட ஏகாதசி : வைணவ ஆலயங்களில் பரமபத வாசல் திறப்பு; குவிந்த பக்தர்கள்!

வைகுண்ட ஏகாதசி : வைணவ ஆலயங்களில் பரமபத வாசல் திறப்பு; குவிந்த பக்தர்கள்!

- Advertisement -

இன்று மார்கழி மாத வளர்பிறை பதினோராம் நாளை முன்னிட்டு, வைகுண்ட ஏகாதசி உத்ஸவம் வைணவ ஆலயங்களில் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள வைணவ திருத்தலங்களில் பரமபத வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்து அருள் பெற்றனர்.

இன்று வைகுண்ட ஏகாதசி தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வைணவ திருத்தலங்களில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பகல் பத்து உத்ஸவம் கொண்டாடப் படும் ஆலயங்களில் அதிகாலையும், இராப் பத்து உத்ஸவம் கொண்டாடப் படும் ஆலயங்களில் மாலையும் வைகுண்ட வாசல் திறப்பு நடைபெறுகிறது.

நாதன் கோவில் திருநந்திபுர விண்ணகர வைகுண்ட ஏகாதசி

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இன்று 6 ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.

மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.

நாதன் கோவில் திருநந்திபுர விண்ணகர வைகுண்ட ஏகாதசி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் கோவில் காலை 5.30 மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version