சித்திரைத் திருநாளை முன்னிட்டு தஞ்சாவூர் பெரியகோவிலில் தேரோட்டம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக் கணக்கில் பக்தர்கள் கூடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
மேல ராஜவீதியில் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பலவகையிலும் அலங்கரிக்கப்பட்ட தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.