― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்கொரோனா: பட்டினப்பாக்கம் சிறப்புக் காவல்துறை உதவி ஆய்வாளர் மரணம்!

கொரோனா: பட்டினப்பாக்கம் சிறப்புக் காவல்துறை உதவி ஆய்வாளர் மரணம்!

சென்னை பட்டினப்பாக்கம் சிறப்புக் காவல்துறை உதவி ஆய்வாளர் மணிமாறன் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகின்றது. இந்த நிலையில், கொரோனா தடுப்புப் பணியில் இருக்கும் காவல்துறையினர், அதிகளவில் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏற்கெனவே மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், சென்னை காவல் துறையில் இரண்டாவது காவலர் தற்போது உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 57 வயது சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனா நோய்த் தொற்றுக்கு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.

தமிழகத்தில் இதுவரை 1,155 காவலர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 422 பேர் குணமடைந்து பணிக்குத் திரும்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version