நெல்லையில் திரும்பும் இடமெல்லாம் சீமை உடைமரங்கள் பெருகி நிற்பது போல பெருகி நிற்கின்றது கொரோனா
இது எதிர்பாரா நெருக்கடி, நிலமை அச்சத்தின் உச்சியில் நிற்கின்றது. சோதனை முடிவுகள் வர வர மிகபெரும் பதற்றம் மேலிடுகின்றது.
இருட்டுகடை அல்லா அதிபர் விடயம் தற்கொலை என்றாலும் அப்படி சொல்லபட்டாலும் அவருக்கும் கொரோனா என்பது உறுதிபடுத்தபட்ட விடயம், இதுபோக இன்னும் ஏகபட்ட பிரபலங்கள் கொரோனாவில் இருப்பதாக உறுதிபடுத்தபடாத தகவல்கள் தெரிவிக்கின்றது
நிலமையும் அப்படித்தான் இருக்கின்றது, திரும்பும் இடமெல்லாம் கொரோனா என நெல்லையும் தூத்துக்குடியும் அலற வைக்கின்றனநாகர்கோவில் பக்கமும் நிலமை மகா மோசம்
இறப்புக்கள் அனுதினமும் எகிறுவதும், ஒரே நாளில் ஆயிரகணக்கான எண்ணிக்கைகள் பெருகுவதும் தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல விஷயம் எல்லை மீறி எங்கோ சென்றுகொண்டிருக்கின்றது
கொரோனா காலத்தில் கண்ணீர் சிந்தவைப்பவை வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் கொரோனா கால மரணம் கத்தாரில் இந்திய பொறியாளர் இறந்திருக்கின்றார், சவுதி உட்பட பல நாடுகளில் இந்தியர் இறப்புக்கள் நடக்கின்றன
பொதுவாக அரபு நாடுகள் அந்நிய நாட்டவரை தங்கள் நாட்டில் புதைக்க அனுமதிக்காது, ஆனால் இது விமான போக்குவரத்து இல்லா நேரம் என்பதால் எப்படி சிக்கலை அணுகுகின்றார்கள் என்பது பற்றி செய்தி இல்லை
அந்நிய மண்ணில் மரிப்பது என்பது கொடுமையான நிலை, அதுவும் உலகம் முடங்கிய கொரோனா காலத்தில் மரிப்பது மிகப் பெரும் கொடுமை
அந்நிய மண்ணில் இந்திய மக்களை மீட்பது ஒரு சிக்கல் என்றால், இனி பிணங்களை மீட்பது அதைவிட பெரும் சிக்கலாகும் போலிருக்கின்றது
நடக்கும் காட்சிகளும் வரும் செய்திகளும் பெரும் மன உளைச்சலை கொடுப்பவை, தெய்வம் இன்னும் கண்திறக்காவிட்டால் இது தீர்வதாகவும் தெரியவில்லை
- ஸ்டான்லி ராஜன்