ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நாம், ஒரு தனித்தீவில் 10 பேரை ஒரு மாதம் அடைத்து வைத்தால் எப்படி இருக்கும் என்ற அடிப்படையில் எடுக்கப்படும் டூ ஹாட் டூ ஹான்டில் ரியாலிட்டி ஷோ தற்போது நெட்பிளிக்ஸில் வெளியானது.
வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நேரத்தில் நாம் தனிமையில் இருக்கும்போது நமக்கு ஏற்படும் காதல், உடலுறவு போன்ற உணர்வுகளை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டது இந்த ரியாலிட்டி ஷோ. ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து 1 மாதம் ஆகிவிட்டது.
ஆனாலும் உங்கள் கூட்டாளருடன் உடலுறவு கொள்ள வாய்ப்பில்லை. அதே சமயம் நீங்கள் தனியாக இல்லை. சமீபத்தில் நெட்பிளிக்சில் ஒரு ரியாலிட்டி ஷோ வெளியானது. இந்த நிகழ்ச்சியில் ஒரு தனித் தீவில் ஒரு மாதமாக அழகான 10 மனிதர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பாலியல் ரீதியாக எதுவும் செய்வதில்லை. இதை பார்க்கும் மக்களுக்கு புதிராக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் மிகச் சிறந்தவர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எந்த பொழுதுபோக்கும் இல்லாமல் இருக்கும் இந்த போட்டியாளர்களில் ஒருவர் இந்த சூழ்நிலை எனது அம்மாவை இழந்தது போல் இருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியை ஊரடங்கு உத்தரவின்போது நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. தனிமையில் இருக்கும்போது எப்படி கையாள வேண்டும் என்பதை இந்நிகழ்ச்சி தெரிவிக்கிறது. எனினும் குழந்தைகள், சிறுவர்கள் இந்த தொடரை பார்ப்பது நல்ல தல்ல என தெரிவிக்கப்படுகிறது.
இந்த போட்டியில் பங்கேற்று பிரம்மாச்சாரியத்தை கடைப்பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு லட்சம் டாலர் பரிசு வழங்கப்படுகிறது. ஊரடங்கிற்கு பிறகு இந்த பரிசை தட்டி செல்வது யார் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.