- முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இந்தியா நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி
நான்காவது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனைத் தவிர வேறு வழியில்லை.
மழை நின்றுவிடாமல், மாலை வரை பெய்தது. இதன் காரணமாக மைதானத்தில் கிரிக்கெட்டை நடத்த முடியவில்லை. இந்த டெஸ்டில் இன்னொரு நாள் முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளது. ஆனால், விளையாட்டின் மிக நீண்ட வடிவத்தில், இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இன்னும் 2 நாட்கள் மீதம் உள்ளன.
ஐ.சி.சி ஆறாவது நாளில் ஆட்டத்தை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு இன்றைவிட நன்றாக இருக்கும் எனக் கூறுகிறது. எனவே, இந்த இரு நாட்களிலும் கிரிக்கெட் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.