சீனத் தலைநகர் பீஜிங் நகரில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹலால் உணவகங்கள் உள்ளன.
சீனாவில் இரண்டு கோடி இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர். இஸ்லாமியர் களால் நடத்தப்படும் உணவகங்கள் மற்றும் உணவு சப்ளை செய்யும் கடைகளில் அரபு மொழி வார்த்தைகளும் இஸ்லாமிய சின்னங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் ஹலால் உணவகங்களில் அரபு மொழி எழுத்துக்கள் மற்றும் இஸ்லாமிய சின்னங்களை அகற்ற வேண்டும் என்று சீன அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது இது சீனாவில் வாழும் இஸ்லாமியர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இஸ்லாமியர்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்களுக்கும் இதுபோன்ற கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்துள்ளது. பல தேவாலயங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன.
மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சீனர்கள் கெடுக்கப்படுவதாகவும் சீன கலாச்சாரம் அழிக்கப்பட்டு வருவதாகவும் அரசு கருதுகிறது. எனவே இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது!
இது போன்ற நடவடிக்கை கடந்த 2016ம் ஆண்டு முதலே நடந்து வருவதாகக் கூறப் படுகிறது. சீனாவில் உள்ள 2 கோடி முஸ்லிம்களும் சீன கலாசாரத்துடன் சீனாவின் பெரும்பான்மையினருடன் கலந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.
இருப்பினும் இதற்கு சீனாவின் இஸாமியர்கள் அதிகம் உள்ள ஜின்ஜியான் மாகாணத்தில் எதிர்ப்பு எழுந்தது. அங்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் போடப்பட்டு, தீவிர நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. இங்கே உள்ள உய்குர் முஸ்லிம் சமுதாயம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களில் சுமார் 20 லட்சம் பேர் மறு கல்வி முகாம்களில் தடுத்து வைக்கப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.