தேர்தல் கமிஷன் இன்னமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வில்லை எனில், திமுக & கமல் கிளப்பும் ஐயங்கள் உண்மை என்றே வெகுஜன புத்தியில் ஆழமாகப் பதிந்துவிடும்
ஒன்று வலிமையாக இந்த சந்தேகங்களை மறுத்து விளக்கமான அறிக்கை தர வேண்டும்
அல்லது இவ்வாறு அவர்கள் கிளப்பும் புகார்கள் பொய் என்றால் அவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும்
- வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட இடங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதாக கமலஹாசன் கூறுகிறார்
- எந்தெந்த வாக்கு எண்ணிக்கை ‘மய்யங்களில்’ கமலஹாசன் அவ்வாறு மர்ம நபர்கள் நடமாடியதைக் கண்டறிந்தார் என்பதைத் தேர்தல் கமிஷன் எழுத்துபூர்வமாகக் கமலஹாசனிடம் கேட்டுப் பெற வேண்டும்
- அப்படிக் கமலஹாசன் புகாரில் உண்மை இருந்தால் அவ்வாறு ‘மர்ம நபர்’ களை அனுமதித்த அதிகாரிகள் எவர்? என்று தேர்தல் கமிஷன் கண்டறிந்து அவர்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
- அவ்வாறில்லாமல் கமல் பொத்தாம் பொதுவாக – தான் காற்றுவாக்கில் கேள்விப்பட்டதை – ஒரு பொதுவெளியில் கூறினார் என்றால் கமலஹாசன் மீது தேர்தல் ஆணையம் அவதூறு வழக்குப் போட வேண்டும்
- திமுக கிளப்பும் ஐயங்கள் – புகார்கள் எந்த விஞ்ஞான அடிப்படைக்கும் EVM விஷயத்தில் அப்பாற்பட்டவை
- ஆனால் மெல்ல, மெல்ல, மெல்ல… மக்கள் மனதில் படித்தவர்கள் உட்பட ஏற்கனவே வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளைச் சுற்றி ஏதோ விஷமம் ஏதோ ஃபிராடு” நடக்கிறது என்ற எண்ணத்தை தங்களின் வலிமையான பிரசாரம் மூலம் ஏற்படுத்திவிட்டார்கள்
- எனவே தேர்தல் கமிஷன் மிக மிக மிகத் தெளிவான அறிக்கையை – EVM களின் நம்பகத்தன்மை / அவை இப்போது வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பான முறை -இவை குறித்து வெளியிட வேண்டும்
- எல்லா செய்தித் தாள்கள், டிவி விளம்பரங்கள் மூலம் தேர்தல் ஆணையம் மிகப் பெரிய அளவில் – திமுகவினர் கிளப்பியுள்ள சந்தேகங்களுக்கு பாயிண்ட் பாயிண்டாக மக்களுக்குப் புரியும் வகையில் EVM கள் தற்போது வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து விளக்க வேண்டும்
- நடப்பது ஏதோ இரு கட்சிகளின் மோதல் அல்ல
- தேர்தல் ஆணையம் என்ற அமைப்பின் செயல்பாட்டின் மீதும், தேர்தல் ஆணையத்தின் ஒட்டுமொத்த நம்பகத்தன்மை மீதும் தொடுக்கப்படும் தாக்குதல் இது
- ஜனநாயகமாவது? வெங்காயமாவது?- என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஆழப் பதியவைக்கும் அபாயகரமான முயற்சியைத்தான் திமுகவும் கமலஹாசனும் செய்கிறார்கள்
- தேர்தல் கமிஷன் தனது நடுநிலைத் தன்மையையும், தில்லுமுல்லு, மோசடி இவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட, ஒரு சுதந்திரமான சக்தியாக தான் இயங்குவதை பகிரங்கமாக பிரகடனம் செய்ய வேண்டிய நேரம் இது …
- முரளி சீதாராமன்