வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யமுடியும் என்று பல கட்சிகளும் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன.
ஆனால் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கும் குறிப்பிட்ட கட்சிகள் தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வந்தால் சத்தமே இல்லாமல் அப்படியே அடங்கிவிடுகின்றன.
உதாரணத்துக்கு கடந்த 2015 ம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவை தேர்தலின் போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யப்படுவதாக பிப்ரவரி 04 ம் தேதி புகார் தெரிவித்தார் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்.
ஆனால் அதன் பிறகு பிப்ரவரி 07 ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று பிப்ரவரி 10 ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது.
அந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சிதான் வென்றது.ஆட்சியமைக்கும் என்று பெரிதும் சொல்லப்பட்ட பாரதிய ஜனதா வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்து வெற்றிபெற முடியும் என்றால் பாரதிய ஜனதாதானே அந்த தேர்தலில் வென்றிருக்க வேண்டும்?குறைந்தபட்சம் ஒரு கவுரமான எண்ணிக்கையிலான தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டுமே?இப்படி படுதோல்வியடைய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
இந்த குற்றசாட்டை எழுப்பிய அர்விந்த் கேஜ்ரிவால் அது குறித்து பின்னர் பெரிதாக சத்தமே காட்டவில்லை.
அண்மையில் மத்யபிரதேஷ்,சட்டீஸ்கட் மற்றும் இராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.அங்கெல்லாம் வாக்குபதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பவில்லை.ஆனால் தெலங்கானாவில் தோல்வியடைந்து. உடனே தெலங்கானாவில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்தது.
அரசியல் கட்சிகள் தங்களின் தோல்விக்கு ஏதேனும் ஒரு காரணம் வேண்டும்.எனவே தேர்தல் ஆணையத்தையும் வாக்குப்பதிவு இயந்திரத்தையும் குறை சொல்வதை ஒரு வாடிக்கையாகவே வைத்துள்ளன.
நாளை ஒருவேளை பாரதிய ஜனதா தோல்வியடைந்தால் இதே குற்றச்சாட்டை முன்வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அதில் அடிப்படை முகாந்திரமும் இல்லை.
தேர்தல் ஆணையத்தால் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்பேயில்லை என்பதை 200% உறுதியாக கூறமுடியும்.
- ரமேஷ் ஹனி குமார் (Ramesh Honey Kumar )