10 ஆண்டுகள் கமல்ஹாசனுடன் வாழ்ந்து பிரிந்த கெளதமியின் முதல் கணவரின் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் நாயகியாக சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்தவர் கெளதமி . இவருக்கு திருமணமாகி 1 பெண் குழந்தை இருந்த நிலையில் கணவரை பிரிந்தார்.
அதன் பின்னர் இவர் உடல்நல குறைவால் அவதியுற்ற போது கமல்ஹாசன் உறுதுணையாக இருந்தார். கிட்டத்தட்ட 10 வருடங்கள் இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்தனர்.
அதன் பின்னர் தன்னுடைய மகளின் எதிர்காலம் கருதி கமல்ஹாசனை விட்டு பிரிவதாக அறிவித்தார் கெளதமி.
இந்நிலையில் தற்போது இவருடைய திருமணத்தின் போது முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் நேரில் சென்று வாழ்த்திய போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் இவர் தான் கெளதமியின் முதல் கணவரா என வியந்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.