தன் மீது குற்றம் சுமத்திய விஷாலை , இயக்குநர் மிஷ்கின் கடுமையாக சாடியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மிஷ்கின் , தான் 13 கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறிய விஷால் அதனை நிரூபிக்க வேண்டும் என குறிப்ப்பிட்டார்.
தனது தாயை பழித்து பேசியதால் படத்தில் இருந்து விலகியதாக மிஷ்கின் தெரிவித்தார். விஷால் – மிஷ்கினின் மோதல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கடந்த 2017ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா, வினய் ராய் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
அந்த படம் வெற்றியடைந்ததால், மீண்டும் மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா நடிப்பில் துப்பறிவாளன் 2 தொடங்கியது.
லண்டனில் பிரம்மாண்டமாக துப்பறிவாளன் 2 படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்புக்கு முன்னாள் இயக்குநர், மிஷ்கின் திடீரென 10 கண்டிஷன்களை போட்டதாக ஆதாரத்துடன் நடிகர் விஷால், தெரிவித்து, இதனால், தான் துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கப்பட்டார் என்பதையும் விளக்கி இருந்தார்.
மேலும், எந்த ஒரு தயாரிப்பாளர்களும் இதுபோன்றவர்களிடம் பலியாடாகி விடாதீங்க என்றும் எச்சரித்து இருந்தார். விஷாலின் இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், இந்த அறிக்கை குறித்து எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் இயக்குநர் மிஷ்கின் மெளனம் காத்தது, குற்றத்தை மேலும் உறுதிப்படுத்தியதாகவே கருதப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை நடைபெற்ற ஜி5 ஸ்ட்ரீமிங் தளத்தின் புதிய வெப்சீரிஸ் படைப்பான கண்ணாமூச்சி பிரஸ்மீட்டில், இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டு, அந்த மேடையை பயன்படுத்தி, நடிகர் விஷாலை பொறுக்கி, பொறுக்கிப்பய என சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்துள்ளது கோலிவுட் வட்டாரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து தன்னை நீக்கிவிட்டு, விஷாலே இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள கோபத்தில், மிஷ்கின், நடிகர் விஷாலை பொறுக்கி என தொடர்ந்து 7 முறை திட்டி தனது கோபத்தை தீர்த்துக் கொண்டார். மேலும், மிஷ்கினின் தாயை ஆபாசமாக விஷால் திட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து விஷால் குறித்து வசை பாடிய இயக்குநர் மிஷ்கின், தமிழ்நாட்டை விஷாலிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றும், உன் பக்கம் தர்மம் இருந்தா வாடா குருக்ஷேத்ர போருக்கு என்றும் இனிமே நீ தூங்கவே மாட்ட டா என்றும் பல சபதங்களை செய்தது போல ஆக்ரோஷத்தின் உச்சிக்கே சென்று ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார்.
எப்படி வெறுங்கையோடு, பேனா கையில் இருக்கிற நம்பிக்கையோடு, சென்னைக்கு வந்தேனோ, அதேமாதிரி இப்பவும் பேனாவை நம்பி பிழைப்பேன் டா.. சினிமா வாய்ப்புகளே வரவில்லை என்றாலும், வாத்தியாரா போய் பாடம் நடத்துவேன் என கோபக் கனலை வீசி கண்ணாமூச்சி பிரஸ்மீட்டில் கண்ணகி அவதாரம் எடுத்து விட்டார் மிஷ்கின்.
பொறுக்கி என்றும், தம்பி மாதிரி நினைத்தேன், இப்படி பண்ணிட்டியே என்றும் விஷால் பற்றி வெறும் அவதூறு பேச்சுக்களாகவே பேசிய மிஷ்கின், அந்த 15 கட்டளைகள் குறித்து மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.
சினிமாவை விட்டு தன்னை விஷால் ஓரங்கட்டி விடுவார் என்ற பயம் மிஷ்கினின் பேச்சில் இருந்தது தெளிவாகவே தெரிகிறது. இதற்கு விஷால் என்ன பதிலடி கொடுக்க உள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.