இந்த நிலையில் சசிகுமார் நடிக்கும் படம் ஒன்றையும் இந்தர்குமார் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கவுள்ள இந்த படத்தில் அவரே வில்லனாகவும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சசிகுமார் தற்போது ‘அசுரவதம் மற்றும் நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அவர் இந்தர்குமார் படத்தில் நடிப்பார் என்றும், இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக கல்லூரி மாணவி ஒருவர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.