நன்கொடையாளர்கள்னா சுவாமி சந்நிதிக்கு முதுகு காட்டிக் கொண்டு அமரலாமா என்று கேள்வி எழுப்புகின்றனர் பக்தர்கள்.
நெல்லையப்பர் கோவில் ஆறுமுகநயினார் சந்நிதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் ஜபம் செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கான நன்கொடையார்களோ சந்நிதிக்கு முன்பு, சேரில் அமர்ந்து கொண்டு, சுவாமிக்கு தங்களது பின்புறத்தை காட்டியவாறு அமர்ந்திருக்கின்றனர். இந்தக் காட்சியைக் கண்ட பக்தர்கள், இது மிகுந்த மன வேதனை அளிப்பதாக பொருமித் தள்ளினர். வேதத்துக்கும் சுவாமிக்கும் இவர்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா என்று கேள்வி எழுப்பினர்.