கடம்போடுவாழ்வு கிராமத்தை சீரழிக்கும் கிரானைட் குவாரி

நாங்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி தாலுகாவின் கீழ் வரும் கடம்போடுவாழ்வு என்னும் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்திலும் சுற்று வட்டார கிராமங்களிலும் பல நீர்நிலைகளும், பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான இடங்களும் உள்ளன. மேலும் நாங்குனேரி – களக்காடு சாலையும் எங்கள் கிரமத்தின் வழியாகவே செல்கிறது. கிரமத்தின் அருகில் பல பள்ளிகளும் உள்ளன.

எங்கள் கடம்போடுவாழ்வு கிராமத்தில் மதுரை மேலூரைச் சேர்ந்த   P.S.கிரானைட் நிறுவனர் P.S.பெரியசாமி அம்பலம் என்பவர் நிலங்கள் வாங்கியுள்ளார், அதில் 9 ஏக்கர் நிலம் சாலையின் ஒருபுறமும் 7 ஏக்கர் நிலம் சாலையின் மறுபுறமும் உள்ளது.

கடந்த 26.01.2016 அன்று P.S.கிரானைட் நிறுவனர்கள் மேற்படி நிலங்ளில் பூமிபூஜை செய்து பொக்லைன் இயந்திரங்கள், குழி தோண்டும் இயந்திரங்கள் மற்றும் இராட்சத இயந்திரங்கள் மூலம் எங்கள் கிராமமும் சுற்று வட்டார கிராமங்களும் அதிரும் படி நிலத்தில் துளையிட்டனர்.

எங்கள் ஊரைச் சேர்ந்த மக்கள் சென்று கேட்கையில் நிலத்தில் 20 அடி அழத்தின் கீழ் தோண்டி கிரானைட் கற்கள் எடுக்கும் தொழில் செய்ய போவதாக கூறினார்கள். எங்கள் கிரமத்தில் தனியார் நிறுவனம் கிரானைட் குவாரி தொழில் தொடங்க போவதாக விளம்பரமோ அல்லது அரசு சார்பில் முன்னறிவிப்போ ஏதுவும் செய்யப்படவில்லை.

கிரானைட் குவாரி நடத்தும் இடத்தின் அருகில் கடம்போடுவாழ்வு குளம், புளியங்குளம், வடுகச்சிமதில் ஆலங்குளம் ஆகிய குளங்களின் தண்ணீர் ஓடை சென்று கொண்டிருக்கிறது. அந்த இடத்தை சுற்றி விவசாய நிலங்கள் நிரம்பி உள்ளன.  

கிரானைட் குவாரியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, விவசாய நிலங்கள் முற்றிலும் பாழ்பட்டு, விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, கிராம மக்களின் வாழ்வாதாரம் முடங்கிப்போகும் பேராபத்து ஏற்படும்.

P.S. கிரானைட் நிறுவனத்தினர் எங்கள் கடம்போடுவாழ்வு கிரமத்தில் கிரானைட் குவாரி நடத்துவதற்காக மத்திய மாநில அரசுகளிடம் முறையான அனுமதியோ உரிமமோ பெற்றதாக தெரியவில்லை, சுற்றுச்சூழல் அமைச்சகத்திலும் முறையான அனுமதி பெற்றதாக தெரியவில்லை, தமிழ்நாடு கனிம வளத்துறையின் அனுமதியையும் பெற்றதாக தெரியவில்லை.

விதிமுறைகள் மீறி சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வரும் கிரானைட் குவாரிகள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகள் நிறைந்துள்ள எங்கள் கடம்போடுவாழ்வு கிராமத்தில்  P.S.கிரானைட் நிறுவனத்தினர் கிரானைட் குவாரி நடத்த எந்த விதத்தில் அரசு அதிகாரிகள் அனுமதி அளித்தார்கள் என்பது தெரியவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories