கோவைக்காய் மசாலாபாத்
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி – ஒரு கப்,
கோவைக்காய் – 200 கிராம்,
கரம் மசாலாத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
கடுகு – அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
வறுத்த முந்திரி – சிறிதளவு,
எண்ணெய், நெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
கோவைக்காயை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாசுமதி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் கோவைக்காய், தேங்காய்த் துருவல், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு அதில் ஊறவைத்த அரிசி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து வறுத்த முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.
சூப்பரான கோவைக்காய் மசாலாபாத் ரெடி.