பிள்ளையார் கனவில் வந்தால் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியில் முடியும் என்பது அர்த்தமாகும்.
கனவில் முருகனை கண்டால் மனதில்
நினைத்த காரியத்தில் வெற்றி கிடைக்க போகிறது என்று அர்த்தமாகும்.
சிவலிங்கத்தை கனவில் கண்டால் தினமும் தியான பழக்கத்தை கொண்டுவர வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
கனவில் அம்பாள் தெய்வத்தினை கண்டால் வீட்டில் ஏதோ சுப நிகழ்ச்சி நடக்கப்போகிறது என்று அர்த்தமாகும்.
கனவில் அய்யனாரை கண்டால் மனதில்
உள்ள பயம் நீங்கி மன தைரியம் அதிகரிக்கச் செய்யும்.
விஸ்ணு பகவான் நம் கனவில் வந்தால்
செல்வந்தர்களாக போகிறோம் என்பது
அர்த்தமாகும்.
விஷ்ணு கருடன் மீது வருவது போன்று கனவு வந்தால் சிக்கலான வழக்கில் வெற்றி கிடைக்க போகிறது என்று அர்த்தமாகும்.
பெருமாள் கனவில் வந்தால் என்ன பலன்: கனவில் பெருமாள் தோன்றினால் தொழிலில் இருந்து வந்த இடைவிடாத பிரச்சனைகள் அனைத்தும் அகன்றுவிடும்.
கனவில் இறைவன் உங்களிடம் பேசுவது
போன்று வந்தால் இந்த ஜென்மம் முழுவதும் புண்ணியம் அடைந்ததாக இருக்கும்.
காளிதேவி உங்கள் கனவில் தோன்றினால் தேவையில்லாத
சச்சரவு வீண் பிரச்சனை தேடி வரப்போகிறது என்று அர்த்தமாகும்.
ஏதேனும் ஒரு கடவுளின் விக்ரகம் கனவில் வந்தால் கனவில் தோன்றிய தெய்வத்தை குடும்பத்துடன் சென்று வழிபடுதல் வேண்டும்.
நவக்கிரகம் கனவில் வந்தால் 9 வாரம் தொடர்ந்து அந்த கோவிலுக்கு சென்று 9 முறை கோவிலை சுற்றி வலம் வர வேண்டும். இதனால் நன்மை பெருகும்.
கனவில் அவர்களுடைய குலதெய்வம் வந்தால் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். கனவில் குலதெய்வம் வந்தால் எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகக்கூடும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
எந்த தெய்வங்கள் வந்தாலும் நன்மையேப் பயக்கும் என்ன என கனவு சாஸ்திரம் கூறுகிறது.