உள் மூலம் சரியாக…
மஞ்சள் செடியின் வேர், வெள்ளைப்பூண்டு,சுக்கு, கடுக்காய், மிளகு. பிரண்டைவேர். கற்றாழை வேர், முள்ள வேர் இலைகளை வகைக்கு 20 கிராம் எடுத்து சேர்த்தரைத்து ஒரு கோலி குண்டளவு புளித்த மோரில் காலையில் மட்டும் சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.
நகச்சுத்தியா?
பால் ஆடையையும் சுண்ணாம்பையும் நன்றாக குழைத்துப் போட்டால் சீக்கிரம் பழுத்து உடைந்து கீழ் வந்து விடும்.
பச்சிளங் குழந்தைக்கு ஜலதோஷமா?
முழு மஞ்சள், நீளமான ஒன்றை ஒரு முனையில் கறுப்பாக சுட்டு சிறிது சுண்ணாம்புடன் விழுது போல் தயாரித்து இதனை சுடவைத்து பொறுக்கும் சூட்டில் குழந்தையின் மூக்கு, நெற்றியில் தடவ ஜலதோஷம் பறந்து விடும்.
ஜூரம்
ஜுரம் வந்தால் கட்டிலில் கம்பளியை விரித்து அதன் மேல் ஒரு டவலை தண்ணீரில் நனைத்து பிழிந்து விரியுங்கள். அதன் மேல் படுத்துக் கொண்டு கம்பளியை உடல் முழுவதும் மூடுங்கள். இன்னொரு டவலை நனைத்துப் பிழிந்து தலை முழுவதையும் சுற்றிக் கொள்ளுங்கள். சற்று நேரத்தில் நன்கு வியர்க்கும். சுரமும் தணிந்து விடும்.
எலும்பு வலுப்பெற…
மீன் எண்ணெயில் வைட்டமின் ‘டி’ அதிகம் இருக்கிறது. மீன் எண் ணெயையோ அல்லது அது கவந்த டானிக்கையோ சாப்பிட எலும்பு வலுப்பெறும்.