அயோத்தி ஸ்ரீராமஜன்ம பூமி வழக்கில், 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பதில், இன்று உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பினை அளித்தது.
இந்தத் தீர்ப்பு குறித்து பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஏஐஎம்ஐஎம் கட்சி எம்.பி., அசாதுதீன் ஒவைஸி இந்தத் தீர்ப்பு குறித்துக் கூறுகையில்…
உச்சநீதிமன்ற தீர்ப்பு திருப்தி இல்லை. நாங்கள், அரசியல் சாசனம் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம். எங்கள் உரிமைக்காக போராடி வருகிறோம்.
5 ஏக்கர் நிலம் என்ற நன்கொடை தேவையில்லை. 5 ஏக்கர் நிலம் என்ற சலுகையை நிராகரிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிறம் வெளிவந்துள்ளது. காங்கிரஸ் வஞ்சகம் மற்றும் பாசாங்குத் தனம் செய்கிறது.
ராஜிவ், நரசிம்மராவ் ஆகியோர் தங்களது கடமையைச் செய்திருந்தால் மசூதி இருந்திருக்கும் என்று அவர் கூறினார்.