ராமர் கோவிலுக்கு 51 ஆயிரம் செங்கற்கள். ஒவ்வொரு கல்லின் மீதும் ராமநாமம் எழுதப் பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளி வந்த பின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான தடைகள் நீங்கி விட்டன. அதேபோல் பக்தர்களிடம் இருந்தும் கொடையாளர்கள் இடமிருந்தும் மிகப்பெரிய அளவில் நன்கொடைகள் வருகின்றன.
அதேபோல் பிகே செங்கற்சூளை தவைவர் சந்தீப்வர்மா தன் நன்கொடையை அறிவித்துள்ளார். அவர் ராமர் கோயில் கருவறை கட்டட வேலைகளுக்காக 51 ஆயிரம் செங்கற்களை தானமாக அளிப்பதாக அறிவித்துள்ளார். இந்த செங்கற்களின் மேல் ராமநாம முத்திரை பதித்திருக்கும்.
இதுகுறித்து சந்தீப் வர்மா கூறுகையில் ராமர் கோயிலுக்கு அனுகூலமாக தீர்ப்பு வெளிவந்ததுமே ராம நாமம் எழுதிய செங்கற்களை அளிக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன் என்று கூறினார்.
இந்த செங்கற்களை மிகவும் கவனமாக தயாரித்து வருகிறோம். மொத்தம் 18 சூளைகளில் செங்கற்கள் தயாராகின்றன. இதுவரை 4000 செங்கற்கள் தயாராகி உள்ளன என்று அவர் தெரிவித்தார்.