திசா குற்றவாளிகள் என்கவுன்டர்… ஒவ்வொரு போலீசுக்கும் ஒரு லட்சம் ரூபாய் ரிவார்டு.
ஹைதராபாத் டாக்டர் பெண் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் போலீசாருக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது
ஹரியானாவைச் சேர்ந்த ராஹு குருப் பவுண்டேஷன் சேர்மன் நரேஷ் சஸெல்பார் என்பவர் தெலங்காணா போலீசாரை பாராட்டி ரிவார்டு அறிவித்துள்ளார்.
குற்றவாளிகளின் என்கவுண்டரில் பங்கேற்ற ஒவ்வொரு போலீசுக்கும் ஒரு லட்ச ரூபாய் ரிவார்டு அறிவித்தார் ஒரு பிசினஸ்மேன். ராஹு குருப் அறிவிப்பு குறித்து நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்