ரயில் தண்டவாளத்தின் மீது அமர்ந்து மதுவிருந்து. ட்ரோன் கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்.
கரீம்நகரில் பகிரங்கமாக மது அருந்திய 10 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் நான்கு இளைஞர்கள் தண்டவாளத்தின் மீது அமர்ந்து மது அருந்தினர். டிரோன் கேமராக்களுக்கு இந்த காட்சிகள் தெரிந்ததால் போலீசார் இந்த கும்பலை கைது செய்தனர்.
கரீம்நகர் மாவட்டத்தில் குடிகாரர்கள் தொல்லை அதிகமாகிவிட்டது. எங்குமே இடம் இல்லாததுபோல் ரயில்வே தண்டவாளத்தின் மீது அமர்ந்து மது அருந்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்கள்.
ரயில் வந்தால் உயிர் போகும் என்ற பயம் கூட இல்லாமல் கதை பேசிக்கொண்டே தண்டவாளத்தின் மீது அமர்ந்து ஃபுல்லாக மது அருந்தி பார்ட்டி செய்துகொண்டிருந்தார்கள். இந்த காட்சிகள் அனைத்தும் டிரோன் கேமராக்களுக்கு சிக்கியதால் அவர்கள் இப்போது கம்பி எண்ணுகிறார்கள்.
கரீம்நகர் ரூரல் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் துர்ஷேட் கிராமத்தில் ஞாயிறன்று பகிரங்கமாக மது அருந்திய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
மரங்களின் மறைவில் அமர்ந்து ஒரு குழு மது அருந்திக் கொண்டிருக்கையில் நால்வர் ஒரேயடியாக ரயில் தண்டவாளத்தின் மீது அமர்ந்து மது அருந்தினர்.
ஞாயிறு மதியம் போலீசார் டிரோன் கேமெரா மூலம் இந்த பகுதிகளை பரிசீலித்த போது இந்த காட்சிகள் அவர்கள் கண்களில் பட்டன .
உடனே களத்தில் இறங்கி குடிகாரர்களை கைது செய்த போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தார்கள்.
பகிரங்க பகுதியில் மிக அபாயகரமாக ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியதால் போலீசார் இவர்கள் மீது பல சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.