இங்கிலாந்து நிதி அமைச்சராக நாராயணமூர்த்தியின் மாப்பிள்ளை.
பிரிட்டன் தேர்தலில் இந்தியாவைச் சேர்ந்த பலர் வெற்றி பெற்று கீழ் சபையில் அடியெடுத்து வைத்துள்ளனர். இவர்களுடன் புகழ்பெற்ற சாப்ட்வேர் தூண்களுள் ஒருவரான இன்போசிஸ் அமைப்பின் இணை தலைவர் நாராயணமூர்த்தியின் மாப்பிள்ளையும் உள்ளார்.
பிரிட்டன் தேர்தலில் போரிஸ் ஜான்சன் தலைமையில் உள்ள கன்சர்வேட்டிவ் கட்சி மிகப்பெரும் வெற்றியை சாதித்து அதிகாரத்திற்கு வந்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி 364 க்கும் மேலான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கட்சிக்கு கிடைத்த மிக அதிக வெற்றி இதுவே என்று கூறப்படுகிறது.
இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் . இவர்களுள் இன்போசிஸ் அமைப்பின் ஸ்தாபகர் நாராயணமூர்த்தியின் மாப்பிள்ளை ரிஷி சுனக் (39) கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் ரிச்மாண்ட் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றுள்ளார்.
பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ரிஷி மிக அருகாமையான வராக கருதப்படுகிறார்.
சென்ற அரசாங்கத்தில் துணை நிதி அமைச்சராக பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். ரிஷியின் வேலைத் திறனில் பிரதமர் போரிஸ் மிகவும் திருப்தி அடைந்ததாக அவருடைய நெருங்கிய வட்டாரம் குறிப்பிடுகிறது. இது குறித்து பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தல் சமயத்தில் கட்சி வேட்பாளராக போரிஸ் ஜான்சனுக்கு உதவியாக நின்று டிவி சர்ச்சைகளில் சுறுசுறுப்பாக பங்குபெற்ற ரிஷி கட்சியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். வரும் ஆண்டு பிப்ரவரியில் நடக்கப்போகும் கேபினட் விரிவாக்கத்தில் இவருக்கு நிதி அமைச்சர் பதவியை அளிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
தற்போது உள்ள நிதித் துறையை மேலும் விரிவாக்குவதற்கும் சர்வதேச வியாபார துறை போன்ற உப துறைகளை அதனோடு இணைப்பதற்கும் போரிஸ் கருதியுள்ளார். அரசியல் வட்டாரத்தில் இது குறித்து சர்ச்சை ஜோராக நடந்து வருகிறது. புதிதாக ஏற்பாடு ஆகும் இந்த துறையில் பொறுப்புகளை ரிஷிக்கு அளிக்க உள்ளார்கள்.
இன்போசிஸ் சேர்மன் நாராயணமூர்த்தியின் மாப்பிள்ளையான ரிஷி சுனக் இங்கிலாந்தில் ஹாம்ப்ஷைர் கௌண்டியில் பிறந்தார். ஆக்ஸ்பர்டு யுனிவர்சிட்டியில் பிலாசபி, அரசியல், எகனாமிக்ஸ் பிரிவுகளில் பட்டம் பெற்றார். பின்னர் ஸ்டான்பர்டு யுனிவர்சிட்டியில் எம்பிஏ படிக்கும் போது உடன் படித்த நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதா உடன் காதலில் இறங்கி அவரை 2009 ல் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
முன்னாள் பிரதமர் தெரிசா மே அரசாங்கத்தில் கூட அமைச்சராக பணிபுரிந்தார்.
அண்மையில் தேர்தல்களில் வெற்றியின் பிறகு சபையில் பதவி பிரமாணத்தின் போது பகவத்கீதை மீது சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டதாக செய்திகளில் நின்றார்.
கன்சர்வேடிவ் கட்சி ட்ரெஷரி பகுதிக்கு சீஃப் செகரட்டரி ஆக தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்.
அரசியலுக்கு வரும் முன்பு கோல்ட்மேன் சாச் நிறுவனத்தில் இன்வெஸ்ட்மென்ட் அனலிஸ்டாக சேர்ந்து பின்னர் அதில் பங்குதாரர் ஆனார். அதுமட்டுமின்றி நாராயணமூர்த்தி அமைப்பின் காடம்ரான் வென்சர்ஸ் டைரக்டராகவும் உள்ளார்.