கேரளா கொல்லம் பள்ளிமண் இடையூா் பகுதியை சோந்த பிரதீப் – தன்யா தம்பதியரின் 6 வயது மகள் தேவநந்தா.
கடந்த 26ஆம் தேதி வீட்டு முன் விளையாடி கொண்டியிருந்த போது திடீரென்று காணவில்லை. இந்த சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமி வசிக்கும் வீடு உள்ள தெருவில் பலரை காவல்துறையினர் விசாரித்தனர்.
இந்தநிலையில் கடந்த 28ஆம் தேதி சிறுமியின் வீட்டு பின்னால் ஒடும் ஆற்றில் இருந்து சிறுமியை சடலமாக மீட்டனர். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தன.
இதனையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 1ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி பாலியியல் ரீதியில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது ஆற்றில் விழுந்து இறந்தாரா? என்ற கோணத்திலும் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கண்ணாடி பெட்டிக்குள் இருந்த மகளின் உடலை பார்த்த தாய் தன்யா பெட்டியை திறங்கள் என் மகளை தொட்டு பார்க்க வேண்டும் என கதறி கதறி துடித்து அழுதது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் மனங்களை பிழிவதாக இருந்தது.
சிறுமியை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளது.