― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாபிரியங்காவின் ஓர் ஓவியம்.. விலை ரூ.2 கோடி! யெஸ் பேங்க் திவாலான ரகசியம்!

பிரியங்காவின் ஓர் ஓவியம்.. விலை ரூ.2 கோடி! யெஸ் பேங்க் திவாலான ரகசியம்!

- Advertisement -

யெஸ் வங்கி நிதி முறைகேட்டில் அதன் நிறுவுனர் ராணா கபூர், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா காந்தியின் ஓர் ஓவியத்தை 2 கோடி ரூபாய்க்கு வாங்கிய தகவல் இன்று வெளியான நிலையில் அது குறித்த பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன.

யெஸ் வங்கியின் நிறுவனர் ராணாவுக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்திக்கும் வர்த்தக தொடர்பு இருந்ததாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டதாம்! அப்போது பிரியங்கா காந்திக்கும் ரானா கபூருக்கும் நெருங்கிய வர்த்தக தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது.

ராணா கபூர் பிரியங்கா காந்தி வரைந்த ஏதோ ஓர் ஓவியத்தை இரண்டு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது! முன்னதாக 30 மணி நேரம் அமலாக்கத் துறை அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் ராணா கபூர். அதன் முடிவில் அவர் கைது செய்யப்பட்டார். டிஹெச்எப்எல் நிறுவனத்தின் நிதி முறைகேடு தொடர்பாக அவர் அமலாக்கத் துறை அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக நேற்று கூறப்பட்டிருந்தது

இதுதொடர்பாக அவரது வீடுகளில் இரு நாட்களாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிரியங்கா காந்தியின் ஓவியத்தை இரண்டு கோடி ரூபாய் கொடுத்து வாங்கி, நிதி மோசடி செய்துள்ளதாக தற்போது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது

இதுபோல்தான் மம்தா பானர்ஜியின் ஓவியங்களை பல கோடிக்கு வாங்கி சாரதா சிட்பண்ட் ஊழலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது!

மேலும் எஸ் வங்கி எந்தவித அனுமதியும் இல்லாமல் தன்னிச்சையாக கிரிக்கெட் வீரர்கள் சிக்சர் அடித்தால் ஒரு லட்சம் கேட்ச் பிடித்தால் ஒரு லட்சம் என்றெல்லாம் பரிசுகளை கிரிக்கெட் போட்டிகளின்போது அள்ளி விட்டதும் இப்போது கேள்விக்கு உள்ளாகியுள்ளது!

வங்கி வாராக்கடன்களால் மட்டும் நெருக்கடிக்கு உள்ளாகவில்லை இதுபோன்ற முறைகேடான நிதி விடுவிப்புகளாலும் ஊதாரித்தனத்தாலுமே நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என்கின்றனர் சமூகத் தளங்களில்!

காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய ஓவியர்களெல்லாம் இருப்பாங்கபோல.! அன்று ஏ.கே.அந்தோனியின் மனைவி வரைந்த ஓவியத்தை ஏர்இந்தியா பல கோடி கொடுத்து வாங்கியது. இன்று பிரியங்கா காந்தி வரைந்த ஓவியத்தை எஸ்பேங்க் இரண்டு கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய விசயம் வெளியில் வந்திருக்கிறது.
உண்மையாகவே கலையையும் கலைஞர்களையும் வாழ வைக்கும் கட்சி காங்கிரஸ்தான்.என்று கிண்டல் செய்து வருகின்றனர் சமூகத் தளங்களில்.

அதே போல், இந்தியாவில் நடைபெறும் அனைத்து நிதி முறைகேடுகளிலும் காங்கிரஸ் கட்சியும் குறிப்பாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் சம்பந்தப் பட்டிருப்பார்கள்… இதிலும் கூடத்தான் என்று கருத்துகள் பரவலாக எழுந்து வருகிறது.

Vijayakumar Arunagiri:
தலையில் அடிக்கிற பெயிண்டங்கை போர்டி ல் அடித்ததற்கே 2 கோடி ரூபாயை எஸ் பேங் சேர்மன் பிரியங்கா வதேராவுக்கு கொடுத்து
ள்ளார் என்றால் இவர்கள் கை காட்டும் ஆட்க ளுக்கு பேங்கில் இருந்து எவ்வளவு கோடி களை கொடுத்து இருப்பார்கள்?.

Vasanthan Perumal:
YES வங்கியை தோற்றுவித்த ராணா கபூர் பிரியங்கா காந்தி வரைந்த ஓவியத்தை 2 கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார்.
………… TIMES NOW செய்தி!
ஓவியர் கலைஞர் பிரியங்கா காந்தி ????

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version