காஸியாபாத் மருத்துவமனையில் நர்சுகளை ஆபாசமாக சைகை செய்து, கொச்சையான வார்த்தைகளால் முஸ்லிம்கள் துன்புறுத்திய செய்தி மறப்பதற்குள், கான்பூர் மருத்துவமனையிலும் தப்ளிக் இ ஜமாத் உறுப்பினர்கள் மீது டாக்டர்கள் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் கான்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தப்ளீக் இ ஜமாத் உறுப்பினர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் தனிமைப் படுத்தப் படும் மையங்களின் நிபந்தனைகளை மீறி எங்கு பார்த்தாலும் அங்கே இங்கே காறித்துப்பி கொச்சைத்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்று மருத்துவக் கல்லூரி முதல்வர்,டீன் டாக்டர் ஆரதி தேவிலால் சந்தானி கான்பூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
தில்லி மார்கஜ் தப்ளீக் இ ஜமாத் முஸ்லிம் பிரார்த்தனை கூட்டத்துக்குச் சென்று வந்த ஜமாத் உறுப்பினர்கள் 22 பேர், கொரோனா வைரஸ் தொற்றின் அடையாளங்களுடன் சந்தேகத்தின் பேரில் கான்பூரில் உள்ள கணேஷ் சங்கர் மாணவர் மெமோரியல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
குவாரண்டின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய இந்த 22 பேரும் மருத்துவமனையில் எங்கு பார்த்தாலும் அங்கு துப்பி மருத்துவ நிபந்தனைகளை மீறி கொச்சை வார்த்தைகளைப் பேசி அநாகரிகமாக நடந்து கொள்கிறார் என்று மருத்துவக் கல்லூரி முதல்வர், டீன் டாக்டர் ஆரதிதேவி லால் சந்தானி குற்றம் சாட்டியுள்ளார்.
சமூக விலக்கம் – சோஷல் டிஸ்டன்ஸ் கடைப்பிடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டாலும் அதனை மீறி நடந்து கொள்கிறார்கள் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.