சண்டிகரில் வசிக்கும் கரண் சிங்லா என்பவர் சென்ற ஆண்டு ஒரு கடையில் இருந்து ஒரு சட்டை வாங்கியுள்ளார். அப்போது சட்டையை கேரி பையில் கொடுத்துவிட்டு, கேரி பைக்கு தனியாக ரூ.8 கட்டணம் வசூலித்துள்ளனர்.
இதனால் அதிருப்தியடைந்த கரண் சிங்லா, இவ்விவகாரத்தை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்திற்கு எடுத்துச் சென்றார். ‘
ஒரு கேரி பைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க வணிகர்களுக்கு சட்டரீதியான அல்லது தார்மீக உரிமை இல்லை என்று தீர்ப்பளித்த மன்ற தலைவர், சம்பந்தப்பட்ட கடைக்கு ரூ.30,000 அபராதமும், புகார்தாரருக்கு ரூ.2,000 இழப்பீடாக செலுத்தவும் உத்தவிட்டார்.