விளம்பரம் இல்லாத சேனலாக மாறப்போகும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல்.
எஸ்விபிசி புதிய கட்டிடத்தை திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்… மறைந்த முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி 2007ல் எஸ்விபிஸி சைனலை வடிவமைத்தார் என்றும் அவருடைய அனுமதியோடு தான் ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்றும் தெரிவித்தார். 2008 ஏப்ரல் 7 ம் தேதி டெஸ்ட் சிக்னல் நடந்ததாகவும் அதே ஆண்டு ஜூலையில் முழுஅளவில் ஒளிபரப்புகள் தொடங்கி விட்டன என்றும் நினைவுபடுத்தினார்.
குறைந்த காலத்திலேயே எஸ் வி பி சி பக்தர்களின் பாராட்டைப் பெற்றது என்றும் அதன்பிறகு 2017ல் தமிழ் சேனல் கூட ஆரம்பமாகின என்றும் தெரிவித்தார்.
புதிய கட்டத்திலேயே இரண்டு ஸ்டுடியோக்களும் டெலி போர்ட்களும் இருப்பதாக கூறினார். எஸ் வி பி சி யை அட்வர்டைஸ்மென்ட் ஃப்ரீ சேனலாக அமைக்க ஏற்பாடு செய்வதாகவும் அதற்காக பக்தர்களிடம் இருந்து நன்கொடைகளைப் கேட்டிருப்பதாகவும் ஒய்வி சுப்பா ரெட்டி தெரிவித்தார். அதற்குள் 4 கோடி ரூபாய்கள் வந்து சேர்ந்தன என்றும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று விரைவிலேயே கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் கூட சேனல்கள் அமைப்போம் என்றும் குறிப்பிட்டார்.
எஸ்விபிசி யை முழுமையாக ஹெச் டி சேனலாக மாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.