1)அப்படியானால் CAG யாக இருந்து 175000 கோடி நஷ்டம் என்று கணக்கிட்ட வினோத் ராய் பொய்யர்!
2) வழக்குப் போட்டதோடு பல டிவி விவாதங்களில் பல்வேறு விளக்கங்கள் கொடுத்த சுப்ரமணிய சாமி பொய்யர்.
3) ‘சிகரம் தொட்ட ஊழல்’ -என்று 2G ஊழல் பற்றி விளக்கமாகப் புத்தகம் எழுதிய தா. பாண்டியனும் அதை வெளியிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக் குழுவும் கப்ஸா மன்னர்கள்.
4) C K மதிவாணன் என்கிற கம்யூனிஸ்ட் தொலைத் தொடர்பு ஊழியர் சங்கத் தலைவர், ஜெயா டிவி உள்ளிட்ட பல டிவி களில் 2G ஊழல் பற்றி விரிவாக நேர்காணல்கள் / விவாதங்களில் தெரிவித்த அத்தனையும் பொய். அவர் திட்டமிட்டு திமுக வைக் களங்கப்படுத்த ஆதாரமற்ற தகவல்களை இட்டுக் கட்டி உள்ளார்.
5) ‘சொல்லுங்கள் ராசாவே’- என்று விகடன் பிரசுரம் வெளியிட்ட புத்தகத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்ற ஹேஷ்யங்கள்.
6) எல்லாவற்றையும் விட 2 G ஊழல் புகாரில் BJP / CPI/CPM ஆகிய அத்தனை கட்சிகளும் கப்ஸா விட்டு மக்களை ஏமாற்றி உள்ளன.
இதை எல்லாம் ஒப்புக் கொண்டால் இந்தத் தீர்ப்பையும் அப்படியே ஏற்றுக் கொள்ளலாம்..!!