20 மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றிய மதபிரச்சாரகர் காவல்துறையினர் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் நலகொண்டா பகுதியில் பாப்பிஸ்ட் சர்ச்சில் வில்லியம்ஸ் என்பவர் மதபிரச்சாகராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நலகொண்டாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வில்லியம்ஸ் மீது புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரில் வில்லியம்ஸ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். அப்போது அவர் வைத்திருந்த 20 லட்சம் ரூபாய் அவர் வாங்கியுள்ளார்.
ஆனால், அவர் தற்போது வேறொரு பெண்ணணுடன் தொடர்பில் இருப்பதாக அவர் மீது புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து, அவரை கைது செய்ய போகும் போது அவரது நெஞ்சு வலி ஏற்பட்டது போல நாடகமாடியுள்ளார்.
உடனே அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்தனர்.
அதன் பின் அவரிடம் நடத்திய விசாரணையில் 20 மேற்பட்ட பெண்களிடம் இது போன்று மோசடியில் ஈடுப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.