லாலு பிரசாத் யாதவின் வீட்டுக்கு முன்னர் வைக்கப் பட்டிருந்த மிகப் பெரிய பேனர் ஒன்று, இப்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
லாலுவின் மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும் ஐஷ்வர்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது. இதற்காக அவர்கள் வீட்டின் முன்னர் மிகப் பெரிய பேனர் ஒன்று வைக்கப் பட்டிருந்தது.
குடும்ப உறுப்பினர்கள் புடைசூழ பேனரில் தேஜபிரதாப் யாதவும் ஐஷ்வர்யாவும் சிவனும் பார்வதியுமாய் நின்ற நிலையில், இறை உருவங்களின் முகம் மட்டும் மாற்றி போட்டோஷாப் செய்யப் பட்டு, அந்த பேனரில் வைக்கப் பட்டிருந்தது.