புது தில்லி: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பின் தற்கொலைப் படைத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் தனி விமானம் மூலம் தில்லிக்கு கொண்டு வரப்பட்டன. டில்லி பாலம் விமான நிலையத்தில் வீரர்களின் உடல்களுக்கு ராணுவ அதிகாரிகளும், வீரர்களும் மரியாதை செலுத்தினர். ராணுவ வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி இறுதி அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல், மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் ராணுவ வீரர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
We salute you, brave sons of Mother India.
You lived for the nation and served the country with unparalleled valour.
We stand in solidarity with the bereaved families. pic.twitter.com/tav2J3hSMI
— Narendra Modi (@narendramodi) February 15, 2019