சியோல் அமைதி விருது பெற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த விருதை நாட்டு மக்கள் அனைவருக்கும் அர்ப்பணிப்பதாகக் கூறினார்.
சியோல் அமைதி விருது பெற்ற பிரதமர் மோடி, இந்த விருதை நாட்டு மக்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன் என்றும், நமது அமைதி மற்றும் நல்லிணக்க கலாசாரத்துக்கு அர்ப்பணிப்பதாகவும் கூறினார்.
இரண்டு நாள் பயணமாக தென்கொரியா சென்றுள்ள பிரதமர் மோடி, முன்னதாக, அந்நாட்டு அதிபர் மூன் ஜே இன் ஐ சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அப்போது பேசிய மோடி பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக இந்தியா – தென்கொரியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இருநாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் உறவில் பாதுகாப்புத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு உதாரணமாகத் தான் இந்திய ராணுவத்தில் கே 9 வஜ்ரா சேர்க்கப்பட்டுள்ளது.. என்றார்.
மேலும், புல்வாமோ தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த தென் கொரிய அதிபருக்கு நன்றி தெரிவித்த மோடி, உலக நாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து, போரிட வேண்டிய நேரம் இது என்று கேட்டுக் கொண்டார்.
சியோல் அமைதி விருது பெற்ற பிரதமர் மோடி ஆற்றிய உரை…
The Seoul Peace Prize is dedicated to the people of India & our country’s culture of peace and harmony. https://t.co/ymUdug3JYp
— Narendra Modi (@narendramodi) February 22, 2019
[poll id=”8″]