வெள்ளிக்கிழமை நேற்று பிரதமர் மோடி தென்கொரியாவின் 2018ஆம் வருட சியோல் அமைதி விருதினைப் பெற்றார். அப்போது, அவரை வரவேற்றும், அவருக்கு மதிப்பு அளிக்கும் விதமாகவும், தென்கொரிய சிறுவர்கள் மகாத்மா காந்திக்குப் பிடித்த வைஷ்ணவ ஜனதோ பாடலை பாடினர். இது நிகழ்ச்சியைக் காண வந்திருந்த அனைவரையும் பெரிதும் கவர்ந்தது.
பிரதமர் மோடிக்கு விருது வழங்கப் பட்ட பின்னர், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் பிரதமர் மோடியை கௌரவிக்கும் விதமாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவற்றில் அனைவரையும் கவர்ந்த அம்சமாக, தென்கொரியச் சிறார்களின் இந்தப் பாடல் அமைந்திருந்தது.
இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார்.
இதில் தென்கொரியச் சிறுவர்கள் அனைவரும் இந்திய உடை அணிந்து, இதைப் பாடியது கண்களை விட்டு அகலாத வண்ணம் அமைந்திருந்தது என்று அனைவரும் குறிபிட்டனர். குஜராத்தி வைணவ கவிஞரான நர்சிமேத்தா இயற்றிய இந்தப் பாடலை மகாத்மா காந்தி தனது பஜன்களில் பிரதான இடம் பிடிக்க வைத்திருந்தார். அதன் மூலம் இந்தப் பாடல் சுதந்திரப் போராட்டக் கால கட்டத்தில் பெரிதும் மக்களைச் சென்றடைந்தது.
Have you seen a more endearing rendition of Vaishnav Jan To bhajan?
Children’s choir of Indian Cultural Centre in Busan singing at the State luncheon hosted by Korean President @moonriver365 in honour of PM @narendramodi. pic.twitter.com/oFN66YKhiC
— Raveesh Kumar (@MEAIndia) February 22, 2019