முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர் பாஜகவில் இணைந்தார்! அவர் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான கௌதம் காம்பீர் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்
கட்சியில் இணைந்த பிறகு காம்பீர் இது குறித்து கூறிய போது நான் பாஜகவில் இணைகிறேன்! பிரதமர் நரேந்திர மோடியின் கனவுகள் மற்றும் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்துள்ளேன். இந்த வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டுள்ளதற்காக நான் பெருமை கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்
பாஜக வட்டாரத்தில் இது குறித்து கூறிய போது புது தில்லி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து கௌதம் காம்பீர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடக் கூடும் என்கின்றனர். தற்போது இந்தத் தொகுதியில் பாஜக.,வின் மீனாட்சி லேகி உறுப்பினராக உள்ளார்!
இது குறித்து இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்ற நிலையில் பாஜக வட்டாரங்கள் இவ்வாறு கூறுகின்றன! அண்மையில் கௌதம் காம்பிருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது! இந்த வருடத்தின் தொடக்கத்தில் நரேந்திர மோடி கௌதம் காம்பீருக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!