17 ஆவது மக்களவைக்கான தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. இதில், முதற்கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவில், சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவாகின.
இன்று 17வது மக்களவைக்கான தேர்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவும், ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய நான்கு மாநில சட்டப் பேரவை களுக்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது.
ஆந்திராவின் 25 மக்களவைத் தொகுதிகள், தெலங்கானாவின் 17 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தின் 8 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 7 தொகுதிகள், அசாம் மற்றும் உத்தராகண்டில் தலா 5 தொகுதிகள், பீகார் மற்றும் ஒடிசாவில் தலா 4 தொகுதிகள் என இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதுபோல், காஷ்மீர், மேற்கு வங்கம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயாவில் தலா 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
சத்தீஷ்கர், மணிப்பூர், திரிபுரா மாநிலங்களிலும், லட்சத்தீவுகள் மற்றும் அந்தமான் நிகோபார் ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் தலா 1 மக்களவை தொகுதி தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது.
மொத்தம் 91 தொகுதிகளுக்கான முதல் கட்டத் தேர்தலில், 1,279 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணி வரை சில தொகுதிகளிலும், மாலை 5 மணி வரை தொகுதிகளிலும் என வாக்குப்பதிவு முடிவுற்றது. முதல் கட்டமாக நடைபெற்ற வாக்குப் பதிவில் 65 சதவீத வாக்குகள் சராசரியாக பதிவானதாகக் கூறப் படுகிறது.
முதற்கட்ட ஓட்டுப்பதிவு நிலவரம்:
அந்தமான் (1 தொகுதி) – 70.67%
ஆந்திரா (25 தொகுதிகள்) – 66%
சத்தீஸ்கர் (1 தொகுதிகள்) – 56%
தெலுங்கானா (17 தொகுதிகள்) – 60%
உத்தரகண்ட் (5 தொகுதிகள்) – 57.85%
ஜம்மு – காஷ்மீர் (2 தொகுதிகள்) – 54.49%
சிக்கிம் (1 தொகுதி) – 69%
மிசோரம் (1 தொகுதி) – 60%
நாகலாந்து (1 தொகுதி) – 78%
மணிப்பூர் (1 தொகுதி) – 78.2%
திரிபுரா (1 தொகுதி) – 81.8%
அசாம் (5 தொகுதிகள்) – 68%
மேற்கு வங்கம் (2 தொகுதிகள்) – 81%
அருணாச்சல பிரதேசம் (2 தொகுதிகள்) -66%
பீஹார் (4 தொகுதிகள்) – 50%
லட்சத்தீவுகள் (1 தொகுதி) – 66%
மஹாராஷ்டிரா (7 தொகுதிகள்) – 56%
மேகாலயா (2 தொகுதிகள்) – 67.16%,
ஒடிசா (4 தொகுதிகள்) – 68%
உ.பி., (8 தொகுதிகள்) – 63.69%