மக்களவைத் தோ்தலில் வாராணசி தொகுதியில் போட்டியிடும் பிரதமா் நரேந்திர மோடி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
2014 மக்களவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் போட்டியிட்டார். இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிடும் பிரதமா் மோடி வாராணசி தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
வியாழக்கிழமை நேற்று வாராணசியில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் பங்கேற்ற பிரதமா் மோடி செய்தியாளா்களிடம் பேசுகையில், பயங்கரவாதத்திற்கு எதிராக தற்போதைய புதிய இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிகழ்வில் தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத்துடன் கலந்து கொண்டாா். மேலும், கூட்டணிக் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இன்று பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில், முன்னதாக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, பிரதமர் மோடியின் வேட்புமனுத் தாக்கலின் போதும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பர் என்று தெரிகிறது.