கிரிக்கெட் வீரர்கள் முகமது சமி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய விளையாட்டுத் துறையில் உயரிய விருதாக கருதப்படும் அர்ஜூனா விருதை, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் ஒவ்வோர் ஆண்டும் வழங்கி வருகிறது. இந்த 2019 ஆண்டுக்கான அர்ஜூனா விருதுகளுக்கு, கிரிக்கெட் வீரர்களை பரிந்துரைப்பது தொடர்பாக பிசிசிஐ இன்று ஆலோசனை நடத்தியது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனை பூனம் யாதவ், கிரிக்கெட் வீரர்கள் முகமது சமி, ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது பெயர்களை மத்திய அரசுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.